சனி, 12 நவம்பர், 2011

உலகிலேயே அழகான அம்மா!



ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில்,வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள்வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்தன் அம்மாவுடன்நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன்பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால்ஓடினான்தன் தாயை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான்.யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின்அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"
அய்யோவழி தெரியாம ரொம்பவந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்டயாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்என கதறிஅழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன்,சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவதொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலைசெஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டுஇருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல..என்று சிறுவன் கூறவேஅவனைசமாதானப்படுத்திய உழவன், "சரிபயப்படாதே...நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்!உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?"எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகாஇருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!"என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச்சென்ற உழவன்எதிரில் மிகவும் அழகான பெண்நடந்து வருவதைக் கண்டார்உடனே "தம்பிஇவங்கரொம்ப அழகாக இருக்கிறாங்கஇவங்க தானே உன்அம்மாஎனக் கேட்கதன் அம்மா இன்னும் அழகாகஇருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர்சுமந்து செல்வதை உழவர் கண்டார்கண்டிப்பாகஇவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின்அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பியஉழவன்சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும்விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக்கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும்கண்ணீருடனும்ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோஎன் அம்மாஅதுதான் என் அம்மாஎன் அம்மாகிடைத்து விட்டாள்!" என சந்தோஷக்கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும்ஒரு கண்ணில் பார்வையில்லாமலும்காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவாஉங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன"என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமாபாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பாநடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்பஅழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டுதன்தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்துநடந்தான்உண்மையான அழகு எது என்பதைஉணர்ந்து கொண்ட உழவன்முகம் இருண்டு போய்அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்
  நன்றி அம்புலி மாமா!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

குழந்தைகளுக்கான இணையதளங்கள்

இணையம் - தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மற்றும் இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.


1. Kidsmart

லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.

முகவரி: http://www.kidsmart.org.uk/

2. Yahoo Kids

குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.

முகவரி: http://kids.yahoo.com/

3. Ask Kids

முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.

முகவரி: http://www.askkids.com/


4. National Geographic Kids

அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.

முகவரி: http://kids.nationalgeographic.com/kids/

5. Kids Health

மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.

முகவரி: http://kidshealth.org/kid/